Saturday, March 31, 2012

மெத்தை

Inline image 1

(படம் பிடித்தது நடராஜன் கல்பட்டு)

வெகு தூரம் நடந்து வந்தேன்

சுட்டெரிக்கும் வெய்யிலிலே

இளைப்பாரிட எங்குமே இல்லையே

இம்மி யளவும் பசு மரத்தின் நிழல்

இருந்தால் தானே மரங்கள்

இருந்திடும் நிழல்

வெட்டிடுறாரே அவைதான்

விரிவாக்கச் சாலைகளை

வெட்டிய மரமும் ஆகிடுமோ

வெல்வெட்டு மெத்தையாய்

கால் கடுக்க வெகு தூரம்

நடந்து வந்த எனக்கே

நடராஜன் கல்பட்டு

No comments:

Post a Comment