Saturday, March 31, 2012

ஒரு சைவம் அசைவம் பேசுகிறது - மீனு வருது மீனு வருது

Inline image 2

(மெரீனா கடற்கரை 1956ல் – படம் நடராஜன் கல்பட்டு)

மீனு வருது மீனு வருது

கட்டு மரத்துலே

கட்டி இளுக்கிறோம் கட்டி இளுக்கிறோம்

தாம்பக் கவுத்தாலே நாங்க தாம்பக் கவுத்தாலே

ஓடி வாங்க ஓடி வாங்க

வகை வகையா மீனு பாக்க

வாங்கிடலாம் வாங்கிடலாம்

வாய்க்குப் புடிச்ச மீனெயுந்தான்

வெச்சுப் பாரு வெச்சு பாரு

மீனு கொளெம்பு நீ மீனு கொளம்பு

வாசம் வந்தே வாசம் வந்தே

ஆளெத் தூக்கும் அது ஆளெத் தூக்கும்

பரவும் பாரு வாசம் அண்டெ ஊட்டுக்கும்

சைவமுந்தான் அறியாமே

கையெத் தூக்கும் அது கையெத் தூக்கும்

மூக்கெ நல்லா அமுக்கிடவே

கையெத் தூக்கும்

01-04-2012 நடராஜன் கல்பட்டு

No comments:

Post a Comment