Saturday, March 15, 2014

காணாமல்போன மலேசிய விமானம் கடத்தல்

239 பேருடன் காணாமல் போன பயணிகள் விமானம் கடத்தப்பட்டிருப்பதாக மலேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த வாரம் காணாமல் போன மலேசிய விமானத்தை இந்தியப் பெருங்கடல் பகுதியில் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அமெரிக்க கப்பற்படை கப்பல்களும் இந்த தேடுதல் வேட்டையில் இணைந்துள்ளன.

மலேசிய அரசாங்கம் கேட்டுக்கொண்டதையடுத்து இந்திய கப்பற்படை, விமானப்படை மற்றும் கடலோரக்காவல் படையினரும் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில் பயணிகள் விமானம் கடத்தப்பட்டிருப்பதாக மலேசிய புலானய்வு துறையினர் தெரிவித்துள்ளனர்.

அனுபவம் வாய்ந்த விமானிகள் விமானத்தை கடத்தியிருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். கடத்தப்படுவதற்கு முன்பாக தகவல் தொடர்பு சாதனங்கள் செயலிழக்கச் செய்யப்பட்டதாகவும் எந்த காரணத்திற்காக விமானம் கடத்தப்பட்டது என தெரியவில்லை என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

விமானம் கடத்தப்பட்டிருப்பதற்கான சாத்திய கூறுகள் இருப்பதாக அமெரிக்க அதிகாரிளும் தெரிவித்துளளனர்.

கடந்த 8 ஆம் தேதி கோலம்பூரில் இருந்து 239 பேருடன் சீனாவிற்கு புறப்பட்டட மலேசிய விமானம் காணமல் போனது.

ஒரு வாரமாகியும் விமானம் பற்றி உறுதியான தகவல் எதுவும் வெளியாகாத நிலையில் தற்போது விமானம் கடத்தப்பட்டிருப்பதாக மலேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

#prayformh370

பேஸ்புக்யில் இருந்து கொண்டே சுட சுட செய்திகளை அறிந்துகொள்ள இப்பக்கத்தை LIKE செய்யுங்க! ! ! !

No comments:

Post a Comment