Sunday, April 1, 2012

என்ன வேண்டும்

எது வேண்டும் சொல் மனமே

அன்பு உள்ளம்

இன்ப வெள்ளம்

அண்மைப் பொருளெலாம்

அழகாய் மலரும்

தேவை இல்லை அன்பு பொழியக்

காசு பணம்

போதுமே பாசம் கொண்ட

நேச மனம்

பேச்சில் கடுமை

மாறா வன்மம் வளர்க்கும்

பேச்சில் இனிமை

பேரின்பம் பயக்கும்

எது வேண்டும் சொல் மனமே

இன்பம் வேண்டுமா அன்றித்

துன்பம் வேண்டுமா

எது வேண்டும் சொல் மனமே

நடராஜன் கல்பட்டு


--

No comments:

Post a Comment